Tuesday, 26 July 2016

பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம்


காளி ஆசன மகிமை

 பெண்களின் கர்பப் பைக்கு உறுதி அளிப்பது காளி ஆசனம் என்னும் அற்புத ஆசனம் ஆகும். பெண்கள் கோலம் இடுதல், தான்யங்களைப் புடைத்து சுத்தம் செய்தல், மஞ்சள் அரைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடும்போது அவர்களையும் அறியாமல் இந்த காளி ஆசனத்தில் அமர்ந்து காரியங்களில் ஈடுபடுவதால் இயற்கையான முறையில் அவர்களுக்கு கர்பப்பை வளம் பெறுகிறது. ஆனால், தற்காலத்தில் இத்தகைய செயல்பாடுகள் குறைந்து வருவதால் அந்த ஆசனத்தில் அமர்ந்து அன்னதான பிரசாதங்களை தயார் செய்ய வைத்து உள்ளுறுப்புகளை வளம்படுத்தும் வழிபாடுகளை பெரியோர்களும், மகான்களும் ஏற்படுத்தித் தருகிறார்கள். 
குத்துக் காலிட்டு அமர்வதே காளி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் கருவுற்ற தாய்மார்களை இத்தகைய காளி ஆசனத்தில் அமர வைத்து மகப்பேற்றை நிறைவேற்றியதால் எத்தகைய வேதனையும் இன்றி பெரும்பாலான தாய்மார்களுக்கு சுகப் பிரசவமே நிகழ்ந்தது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் பூரண உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று விளங்கின. 

Breech presentation போன்ற பிரசவ கால பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைவதே காளி ஆசனமாகும்.


http://kulaluravuthiagi.com/panchabutham.html 


ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்


 


 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

 

http://www.agasthiar.org/ 


 


http://kulaluravuthiagi.com/ 

 

திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment