http://omeswara.blogspot.in/2013/07/blog-post_16.html
*
http://omeswara.blogspot.in/2013/05/blog-post_7.html
நாம் பெற்ற தேகம் எப்படியும் கண்டிப்பாக ஒருநாள் அழியத்தான் போகிறது. அப்படி அழியப்போகின்ற இந்த உடலை வளர்ப்பதற்கு தாவர உணவை தவிர்த்து பாதகமான ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை புசித்தாலும் காப்பாற்ற முடியாது. ஆகவே நிலையில்லாத தேகத்திற்காக மாமிச உணவை உண்டு அழியாத ஆன்மாவிற்கு பாவச்சுமையை ஏற்றி நரகத்தில் வீழ்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
நாம் எவ்வளவுதான் தானம்,தருமம் செய்தாலும் அசைவ உணவுகளை விடாதவரை நாம் ஆண்டவன் அருளை முழுமையாக பெற முடியாது. எப்படி ஒரு உயிர் உணவுக்காக கொல்லப்படும்போது துடிக்கிறதோ அவையனைத்தும் அதை சாப்பிடுபவரை நிச்சயம் பாதிக்காமல் விடவேவிடாது.எதிர்பாரத விதமாக நமக்கு உடலில் ஒரு காயமோ,கீறலோ ஏற்பட்டால் எப்படி துடிக்கிறோம் அதை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான அவஸ்தையை கொல்லப்படும் உயிர் அனுபவிக்கிறது.அதனுடைய உயிர் பலவந்தமாக பறிக்கபடும் போது ஏற்படும் அதிர்வு,அந்த உயிரின் அவஸ்தை,அது கொடுக்கும் சாபங்கள் அந்த உடலை உண்பவரையும்,கொண்றவரையும் விடாது.
*
http://omeswara.blogspot.in/2013/05/blog-post_7.html
No comments:
Post a Comment